திருவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து பலியான 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2022-01-03@ 00:02:19

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் வழிவிடுமுருகன் (40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை திருவில்லிபுத்தூர், களத்தூர் அருகே நாகலாபுரத்தில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 அறைகள் இடிந்து விழுந்து குமார் (38), பெரியசாமி (55), செல்வம் என்ற வீரக்குமார் (40) மற்றும் முருகேசன் (35) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக நத்தம்பட்டி போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளரான வழிவிடுமுருகன் மீது, இந்திய வெடிபொருள் சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவில்லை என்பதால், இந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து, விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம், களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் நான்கு பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Tags:
Srivilliputhur Fireworks factory explosion Rs 3 lakh each relief fund Chief Minister MK Stalin திருவில்லிபுத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின்மேலும் செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம், ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கடியபட்டணத்தில் கடல் சீற்றம் அலை தடுப்பு சுவரில் தூக்கி வீசப்பட்ட பைபர் வள்ளம்: ஒரு வள்ளம் கடலில் மூழ்கியது
சேலம் ஜங்ஷன் அருகே குறுகலான ரயில்வே தரைப்பாலம் 10 மணி நேரத்தில் மாற்றியமைப்பு: இன்னும் பாதியளவு பாலத்தை சீரமைக்க ஏற்பாடு
தர்மபுரியில் அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 24 பேர் படுகாயம்
வால்பாறையில் தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாக வீடு இடிந்து சேதம்
கும்பகோணம் அருகே சாலையோரம் பதுக்கி வைத்திருந்த உலோக சுவாமி சிலைகள் பாவை விளக்குகள் பறிமுதல்: இருவர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!