ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் வீர மரணம்
2021-12-31@ 00:08:40

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நவ்காம் ஷஹாபாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீரர்கள் அங்கு விரைந்தனர். அப்போது, தீவிரவாதிகள் திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். வீரர்கள் நடத்திய பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 3 வீரர்களும், ஒரு போலீஸ்காரரும் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதேபோல், குல்காம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களும் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்தான். ஜம்மு காஷ்மீரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் தீவிரவாதம் தலை தூக்கியது. அப்போது, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளால் உள்ளூரில் தேர்வு செய்யப்பட்ட ஏராளமான இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறினார்கள். பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் நடவடிக்கையால், தீவிரவாதிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 200 ஆக குறைந்து இருப்பதாக ராணுவம் நேற்று தெரிவித்தது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை... வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்
தையல்காரர் கொலை வழக்கில் ஐதராபாத்தில் ஒருவன் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை
இமாச்சலில் கொட்டி தீர்த்த கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 16 வயது சிறுமி பலி; 2 பேர் படுகாயம்
2 நாள் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை..வெள்ளிக்கிழமை வரை கனமழை பெய்யும் என எச்சரிக்கை
கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது.. ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் : உச்சநீதிமன்றம்
மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை : உடல்களை நாடு கொண்டு வர ஒன்றிய அரசு தீவிர முயற்சி!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!