இரவில் தேவையின்றி வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை
2021-12-31@ 00:07:42

சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமிக்ரான் வகை தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாக கடைபிடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
பின்னர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் விதிமீறல் இருக்கிறதா என கண்காணிக்க, மண்டலத்திற்கு, மூன்று அமலாக்க குழுக்கள் நியமிக்கப்படுகிறது. இந்த குழுவினர், இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். மேலும், கடைகள் இரவு 11 மணிக்குள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடைக்கு வருபவர்கள் திரும்ப, 12 மணி வரை நேரம் ஒதுக்கப்படுகிறது. அதன்பின், வருவோர் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவர். பிற அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டுப்பாடு இருக்காது. அதேவேளையில், தேவையின்றி வெளியே வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்களும் சோதனைக்கு பின்தான் அனுமதிக்கப்படுவர். இதனால், அவர்களுக்கு கால விரயம் ஆகலாம் என்றார்.
Tags:
At night around police commissioner Shankar Jiwal alert இரவில் சுற்றினால் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கைமேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!