வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தர வேண்டும்: பெரம்பலூர் கலெக்டரிடம் பெண் கோரிக்கை மனு
2021-12-30@ 12:16:38

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பாளையம் கிராமம். இவ்வூர் 1வது வார்டு ஆரோக்கிய மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் ராஜீவ்குமார்(39). இவரது மனைவி பாக்கியசீலி(32). இவர் நேற்று (29ம்தேதி) தனது 2 வயது பெண் குழந்தை சஜூலின் மார்ட் மற்றும் உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அளித்தக் கோரிக்கை மனுவில்,எனது கணவர் ராஜீவ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 31ம்தேதி துபாய்க்கு எலக்ட்ரீஷியனாக வேலைக்கு சென் றார்.
அங்கு நேற்று (28ம்தேதி) தங்கியிருந்த குடியிருப்பில் அதிகாலை 5.30மணிக்கு மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என அவர் பணிசெய்யும் அலுவலகத்திருந்து தகவல் வந்தது. இதனை அருகே பணிபுரியும் உறவினர் மூலம் உறுதி செய்து கொண்டோம். எனது கணவரின் உடலை விரைந்து மீட்டுத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பாக்கியசீலியிடம் உறுதிய ளித்தார். முன்னதாக எம்எல்ஏ பிரபாகரனிடமும் இதேபோல் மனு அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!