தமிழகத்தில் இயங்கும் எஸ்பிஐ கிளையில் தமிழ் புறக்கணிப்பு... இந்தி தெரியாதவருக்கு தமிழ், ஆங்கிலம் இல்லாத இந்தி படிவங்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை!!
2021-12-29@ 12:03:02

சென்னை : சென்னையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில் இந்தி தெரியாத வாடிக்கையாளருக்கு இந்தியில் அச்சிடப்பட்ட படிவம் வழங்கப்பட்டதுடன் தமிழ், ஆங்கிலத்தில் படிவம் இல்லை என்று கூறியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இந்தி திணிப்பு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்ற வசந்த குமார் என்ற வாடிக்கையாளர் லாக்கரை திறப்பதற்கான படிவத்தை கேட்டுள்ளார்.
அதில் லாக்கர் எண், கையெழுத்து ஆகிய விவரங்கள் மட்டுமே ஆங்கிலத்தில் இருந்த நிலையில், மற்ற அனைத்து விவரங்களும் இந்தியில் இருந்துள்ளது. இந்தி தெரியாத தனக்கு தமிழ், அல்லது ஆங்கிலத்தில் படிவம் வழங்குமாறு வங்கி அலுவலர்களிடம் அவர் கேட்ட போது, புதிதாக அச்சிடப்பட்ட படிவம் இந்தியில் மட்டுமே இருப்பதாக பதில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக வசந்த் குமாரின் மகள் சுசித்ரா ட்விட்டர் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு புகார் அளித்துள்ளார். இதனிடையே சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜா அண்ணாமலை புரம் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், இந்த விவகாரத்தை தலைமை அலுவலகமே கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Tags:
எஸ்பிஐமேலும் செய்திகள்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சிஎம்டிஏ திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் பிப்.1ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: வேலூரில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு
முதுநிலை படிப்புகளில் சேர மார்ச் 25, 26ம் தேதி டான்செட் சி.இ.இ.டி.ஏ நுழைவுத்தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
2022ம் ஆண்டிற்கான தொழிலாளர் நிதி செலுத்த 31ம் தேதி கடைசி நாள்: தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் தகவல்
அடுத்தாண்டு மார்ச் மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!