அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்: ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் கோரிக்கை
2021-12-29@ 00:25:42

செங்கல்பட்டு: குறைந்த ஓய்வூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பி.ராயமூர்த்தி விடுத்துள்ள அறிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு, சட்டமன்றத்தில் அறிவித்தபடி அகவிலைப்படியினை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கி உள்ளார். அதை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிதி இல்லாத நிலைமையிலும் படிப்படியாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். இன்று அகவிலைப்படி ஓய்வூதியர்களுக்கு அறிவிக்கப்பட்டாலும், சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவில்லை. அவர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் உள்ளனர். பல்வேறு சாதனைகளை செய்து வரும் முதலமைச்சர், மாதந்தோறும் மிகக் குறைந்த பென்ஷன் ₹2000 பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து உதவ வேண்டும் கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,658 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
சென்னையில் ஜூலை 8-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
படிக்கும் காலத்தில் அரசியல் உணர்வோடு வளரவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்
தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் போது விபரீதம்; மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கூடுவாஞ்சேரி அருகே மறியல் போராட்டத்தால் பரபரப்பு, டாரஸ் லாரி மோதி பெண் பலி; 30 அடி தூரத்துக்கு இழுத்து சென்ற அவலம்
தந்தை நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ1.50 லட்சம் மதிப்புள்ள தங்கப்பேனா திருட்டு: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!