செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தம்
2021-12-29@ 00:09:07

குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது நேற்றுடன் நிறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மிக வேகமாக நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்துaகடந்த நவம்பர் 7ம் தேதி முதல் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. மேலும் தொடர் கனமழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்துவிடுவது தொடர்ந்தது. இந்தவேளையில், 51வது நாளான நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
தற்போது ஏரியில் நீரின் உயரம் 23.17 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3423 மில்லியன் கனஅடியாகவும், நீர்வரத்து 300 கன அடியாகவும் உள்ளது. அதேபோல் நீர் வெளியேற்றும் அளவு 148 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இதுவரை தொடர்ந்து 51 நாட்களாக உபரிநீர் திறக்கப்பட்டது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
சென்னையில் வரும் 31-ம் தேதி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்
இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு சிறையில் உள்ள 60 கைதிகள் விடுதலை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை பிப்.1ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து
நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!