மன்னார்குடி- ஜெய்ப்பூருக்கு 1.50 லட்சம் முட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு
2021-12-28@ 12:08:27

மன்னார்குடி: நாமக்கல்லில் இருந்து 1.50 லட்சம் முட்டைகள் நான்கு மினி லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரத்திற்கு பயணிகள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப் பட்டது.இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து சாலை போக்குவரத்து மூலமும் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ரயில்கள் மூலமும் வெளி மாநிலங்களுக்கு முட்டைகள் கொண்டு செல்லப் படுகின்றன.
இந்த நிலையில், நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரு க்கு 1.50 லட்சம் முட்டைகள் 750 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு சாலை மார்க்கமாக நான்கு மினி லாரிகள் மூலம் மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது.
பின்னர், மன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு செல்லும் பகல்கீ கோத்தி பயணிகள் விரைவு ரயிலில் முட்டைகள் அடங்கிய பெட்டிகள் ஏற்றப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இப்பணிகளை நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து சாவு: போனில் பேசியவருக்கு வலை
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மாநில அரசு கோரிக்கை வைத்தால் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்: ஒன்றிய அமைச்சர் தகவல்
அரக்கோணம் அருகே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற விஏஓ
புதுவையிலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க உத்தரவு
பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!