பீகார் நூடுல்ஸ் ஆலையில் பாய்லர் வெடித்து 7 பேர் பரிதாப பலி
2021-12-27@ 00:14:15

முசாபர்பூர்: பீகாரில் நூடுல்ஸ் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்து 7 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். பலர் காயமடைந்தனர். பீகாரின் முசாபர்பூர் நகரில் பேலா தொழிற்பேட்டையில் நூடுல்ஸ் மற்றும் நொறுக்கு தீனிகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பாய்லர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர். பாய்லர் வெடித்த சத்தம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது. பாய்லர் வெடித்து தொழிற்சாலை கட்டிடம் முற்றிலும் உருக்குலைந்ததோடு, அருகில் உள்ள பல கட்டிடங்களும் சேதமடைந்தன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்குவதாக மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
Tags:
Bihar Noodles factory Boiler explosion 7 people killed பீகார் நூடுல்ஸ் ஆலை பாய்லர் வெடித்து 7 பேர் பலிமேலும் செய்திகள்
சிரஞ்சீவியின் காட்ஃபாதர் வீடியோ ரிலீஸ்
பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம் இயக்குனர் லீனா மீது நடிகை கடும் தாக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் கண்டனம்
பவன் கல்யாண் பெயரை பச்சை குத்திய நடிகை
அல்லு அர்ஜுனுடன் இணைகிறார் விஜய் சேதுபதி
துணை ஜனாதிபதி தேர்தல் மனுதாக்கல் தொடங்கியது: ஆக.6ம் தேதி வாக்குப்பதிவு
குடும்ப சுமையால் வெளி உலகத்தையே பார்க்காதவர் தாயை 56 ஆயிரம் கிமீ ஆன்மிக பயணம் அழைத்து செல்லும் மகன்: திருப்பதியில் சுவாமி தரிசனம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!