பூந்தமல்லி பகுதியில் 7 கடைகளில் 35 கிலோ குட்கா அதிரடி பறிமுதல்
2021-12-26@ 01:23:45

பூந்தமல்லி: பூந்தமல்லியில் 7 கடைகளில் 35 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த ஓட்டலில் இருந்து தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதி கடைகளுக்கு சிப்ஸ் ஏற்றி வந்த வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் உணவு பொருட்களுக்கு உரிமம் இருந்தது. ஆனால், அதை ஏற்றி வந்த வாகனத்துக்கு உணவு பாதுகாப்பு துறையில் இருந்து உரிமம் பெறவில்லை எனத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் திருநின்றவூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா பறிமுதல் செய்து, 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு கடையை தற்காலிகமாக மூடியதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
வேலூர் அருகே காதலி மீது சந்தேகம் அடைந்து அவரை கத்தியால் குத்திய காதலன் கைது
நாகை அருகே இரு மீனவ கிராமங்கள் இடையே கடும் மோதல்: 2 கிராமங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கைது
2 பேரை கொல்ல சதி திட்டம் மாணவன் உள்பட 3 பேர் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்காவில் 4 ஆண்டாக தலைமறைவான மோசடி மன்னன் பிடிபட்டார்
ஆவண மோசடி வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு சிறை
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!