மைசூர்- சென்னை உட்பட 7 தடங்களில் புல்லட் ரயில்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவு
2021-12-25@ 00:50:04

புதுடெல்லி: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாக, மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத் வரையில், ரூ.1.10 லட்சம் கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், டெல்லி - வாரணாசி, அயோத்தி உட்பட நொய்டா வழியாக ஆக்ரா - லக்னோ வரையிலான 942 கிமீ, பாட்னா வழியாக வாரணாசி முதல் அவுரா (760 கிமீ.), ஜெய்ப்பூர் வழியாக டெல்லி முதல் அகமதாபாத் (886 கிமீ), சண்டிகர், லூதியானா, ஜலந்தார் வழியாக டெல்லி முதல் அமிர்தசரஸ் (459 கிமீ), நாசிக் வழியாக மும்மை முதல் நாக்பூர் வரை (740 கிமீ), புனே வழியாக மும்பை முதல் ஐதராபாத் (711 கிமீ) மற்றும் பெங்களூரு வழியாக சென்னை முதல் மைசூர் (435 கிமீ) ஆகிய 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் சேவையை வழங்குவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
2022-2023ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி-வாரணாசி வழித்தடத்திற்கான திட்ட அறிக்கையை, கடந்த நவம்பரில் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சமர்ப்பித்து விட்டது. மற்ற திட்டங்களுக்கான அறிக்கைகளை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் இது முடியும் என தெரிகிறது.
மேலும் செய்திகள்
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
சுகாதார திட்டங்களுக்கான ஒன்றிய அரசு தரும் நிதியை விரைவாக பெற வேண்டும்: மாநிலங்களுக்கு அறிவுரை
தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு
கூட்டு பலாத்காரம், 7 பேர் படுகொலை பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் விடுதலை: பொதுமன்னிப்பு என்ற பெயரில் குஜராத் அரசு சர்ச்சை உத்தரவு
ஆந்திராவில் உள்ள 10 தங்க சுரங்கங்களை மீண்டும் திறக்க ஏலம்
இலவசம்னு சொல்றதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் ஆவேசம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!