ஊட்டி-மேட்டுபாளையம் இடையே 60 நாட்களுக்கு பின் மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது
2021-12-23@ 00:08:54

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழை காரணமாக ஹில்குரோவ் மற்றும் ஆடர்லி உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக மேலும் பல இடங்களிலும் பாறைகள் விழுந்ததால், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது பாறைகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 60 நாட்களுக்கு பின் நேற்று முதல் மேட்டுப்பாளையம் - ஊட்டி வரையிலான மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. 5 பெட்டிகளுடன் மதியம் 12.05க்கு ஊட்டி ரயில் நிலையத்திற்கு வந்தது. இதில் 180 பயணிகள் பயணித்தனர். 60 நாட்களுக்கு பின் மலை ரயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:
Ooty-Mettupalayam 60 days later mountain train service started ஊட்டி-மேட்டுபாளையம் 60 நாட்களுக்கு பின் மலை ரயில் சேவை துவங்கியதுமேலும் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு
ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
திருத்தணி முருகன் கோயிலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பணிக்கொடை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்