வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள்: விஞ்ஞானிகள் தகவல்
2021-12-23@ 00:08:00

லண்டன்: வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்கலாம் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கார்டிப், எம்.ஐ.டி ஆகிய பல்கலைக்கழங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வீனஸ் கிரகத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பூமியில் இருந்து வீனஸ் கிரகம் 47.34 மில்லியன் கி.மீ தூரத்தில் உள்ளது. சூரியனில் இருந்து 2வது கிரகமான வீனஸில் உயிர்கள் வாழும் சூழ்நிலை கிடையாது. இந்த கிரகத்தில் கந்தக அமிலம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, உயிர்கள் அங்கு வாழ முடியாது என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தில் உள்ள மேகங்களில் அம்மோனியா இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. கந்தக அமிலம் உள்ள கிரகத்தில் அம்மோனியாவும் இருப்பதற்கு வேதியியல் சான்றுகள் உள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் வில்லியன் பெய்ன்ஸ் கூறுகையில், ‘வீனஸ் கிரகத்தில் அம்மோனியா இருப்பது உண்மையானால், அங்கு நுண்ணுயிர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது’ என்றார். மேலும், ஹைட்ரஜன் வாயு வீனஸ் கிரகத்தில் இருப்பதால் பூமியில் இருப்பதை போன்ற நுண்ணுயிர்கள் அங்கும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!
ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை
ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புது தகவல்: விண்கற்கள் எதனால் ஆனவை?
அணுக்கரு இணைப்பில் அதிக ஆற்றலை கொணர்ந்து சாதனை: ஐரோப்பிய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி..!!!
2022ம் ஆண்டின் முதல் ராக்கெட் :பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் பிப்.14-ல் விண்ணில் பாய்கிறது!!
கைவிடப்பட்ட ராக்கெட் வரும் மார்ச் 4ம் தேதி நிலவில் மோதுகிறது: ராக்கெட் மோதுவதால் நிலவில் பள்ளம் ஏற்படும் என நாசா தகவல்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்