கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திடீர் கைது
2021-12-22@ 19:37:29

தொண்டாமுத்தூர்: கோவைபாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 17ம் தேதி சுபவீரபாண்டியன் தலைமையில் பெண் அடிமை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திராவிடர் கழகத்துக்கு ஆதரவாக செயல்படுவதுடன், மாணவர்களை திசை திருப்பும் நோக்கில் செயல்படும் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் பல்கலைக்கழகம் முன் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அங்கு வந்த வடவள்ளி போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், கலைந்து செல்லுமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை ஏற்க மறுத்து எச்.ராஜா தலைமையில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணியினர் உள்பட 100க்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எச்.ராஜா உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கல்வீரம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
ராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்!!
கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிக்காட்டி
பாதாள சாக்கடை பணிகளால் மீண்டும் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை: சீரமைக்க கோரிக்கை
மதுராந்தகம் ஒன்றியம் முதுகரை கிராமத்தில் சேதமடைந்த ஏரி உபரிநீர் தடுப்பணை: புதர் மண்டிய கால்வாயையும் சீரமைக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம் பேரூராட்சியில் 80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சூனாம்போடு அரசு பள்ளிக்கு ரூ.15 லட்சத்தில் நவீன கழிப்பறை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;