இஸ்ரேல் நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்றால் முதல் பலி... 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்!!
2021-12-22@ 08:45:04

ஜெருசலேம் : இஸ்ரேல் நாட்டில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், இந்தியா உட்பட 90 உலக நாடுகளில் பரவி உள்ளது. வேகமாக பரவும் இந்த வகை வைரஸ், இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் ஒமிக்ரானின் கோர தாண்டவம் தொடங்கி விட்டதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.பீர்ஷெபா நகரில் உள்ள சொரோகா மருத்துவ மையத்தில் 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டுள்ளார். இதனிடையே கடுமையான இணை நோய்களால் இவர் அவதிப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸால் ஏற்படும் சுவாச தொற்றால் இவர் இறக்கவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் மருத்துவ பரிசோதனையில் இவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது. இதுவரை இஸ்ரேலில் ஒமிக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 340 மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:
இஸ்ரேல்மேலும் செய்திகள்
திரைத்துறை வணிகத்தில் இந்தியா முன்னேற்றம்: கேன்ஸ் பட விழாவில் மத்திய அமைச்சர் பெருமிதம்
ரூ.3.3 லட்சம் கோடி விலை தர முடியாது டிவிட்டரில் 20% போலி கணக்கு: புது குண்டை தூக்கிப் போட்ட எலான் மஸ்க்
ஜமைக்காவில் அம்பேத்கர் சாலை: ஜனாதிபதி ராம்நாத் திறந்து வைத்தார்
மரியுபோல் தொழிற்சாலையில் பதுக்கி சண்டை 260 உக்ரைன் வீரர்கள் பலத்த காயத்துடன் சரண்: ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதி
பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை எரியும் நெருப்பில் எண்ணெய்... உடையும் ஐரோப்பிய ஒன்றியம்; விரிவடையும் நேட்டோ அமைப்பு; அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா; 3ம் உலகப் போரை தூண்டுகிறதா அமெரிக்கா?
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.! அதிபர் கோத்தபய பதவி தப்பியது: இலங்கையில் பரபரப்பு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!