ஜம்மு காஷ்மீர் தொகுதி வரையறையை கண்டித்து போராட்டம்: குப்கர் கூட்டணி அறிவிப்பு
2021-12-22@ 00:05:04

ஜம்மு: தொகுதி வரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் பிரிவினையை உண்டாக்கும், ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று குற்றம்சாட்டிய குப்கர் மக்கள் கூட்டணி, இதற்கு எதிராக வரும் ஜனவரி 1ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது காஷ்மீரில் 46, ஜம்முவில் 37 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி வரையறைக்காக நியமிக்கப்பட்ட ஆணையம் நேற்று முன்தினம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதில், ஜம்முவுக்கு கூடுதலாக 6 தொகுதிகள், காஷ்மீருக்கு ஒரு தொகுதியையும் பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குப்கர் மக்கள் கூட்டணியின் செய்தி தொடர்பாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான தாரிகமி கூறிய போது, ``தொகுதி வரையறை பிரச்னையில் அமைதியையே விரும்புகிறோம். ஆணையத்துடனோ அல்லது அரசுடனோ மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை. தொகுதி வரையறை குறித்த எங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வரும் ஜனவரி 1ம் தேதி ஸ்ரீநகரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த இருக்கிறோம். ஆணையத்தின் வரைவு அறிக்கை அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை. இது, ஜம்மு காஷ்மீர் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடியவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பதில் குப்கர் கூட்டணி உறுதியாக உள்ளது,’’ என்றார்.
Tags:
Jammu and Kashmir constituency definition condemnation struggle Kupkar alliance ஜம்மு காஷ்மீர் தொகுதி வரையறை கண்டித்து போராட்டம் குப்கர் கூட்டணிமேலும் செய்திகள்
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆதரவாளர்களுடன் எடப்பாடி ஆலோசனை
வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
சசிகலா 3 நாட்கள் சுற்றுப்பயணம்: ஆதரவாளர்களை சந்திக்கிறார்
காவல் துறையில் துணை ராணுவத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக வேண்டுகோள்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!