குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
2021-12-21@ 14:15:08

குன்னூர் : குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்கம் பணி நடைபெற்ற இடத்தில் பிளவு ஏற்பட்டதால் தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பதினேழு இடங்களில் சாலை விரிவாக்க பணி தேசிய நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது. இதே போன்று நூற்றுக்கும் மேற்பட்ட கழிவு நீர் செல்ல பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் கடந்த ஒன்பது மாத காலமாக முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் குன்னூர் காட்டேரி பார்க் பகுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சாலை விரிவாக்க பணி நடைபெறும் போது சாலையில் சுமார் 7 மீட்டர் வரை சாலையில் பிளவு ஏற்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் மட்டும் கோத்தகிரி வழியாக மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் கனரக வாகனங்கள் கோத்தகிரி வழியாக மாற்றம் செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வர கனரக வாகனங்கள் இந்து சாலையில் அனுமதிக்கப்படுகிறது. பிளவு ஏற்பட்ட பகுதியில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!