மாமல்லபுரம் புலிக்குகையில் கமாண்டோ படை வீரர்கள் ஆய்வு
2021-12-17@ 00:05:02

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை பகுதியில் தமிழ்நாடு கமாண்டோ படை வீரர்கள் ஆய்வு செய்தனர். மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையையொட்டி சாலவான் குப்பம் கிராமத்தில் புராதன சின்னமான புலிக்குகை அமைந்துள்ளது. பல்லவ மன்னர்களால் 7ம் நூற்றாண்டில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட, ஒரு பாரம்பரிய நினைவு சின்னம். இதனை, உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. முழுக்க, முழுக்க பல்லவர்கள் புலிகளின் தலைகளை சிற்பங்களாக வடித்து இங்குள்ள பாறையில் அழகுற வடிவமைத்துள்ளனர். இந்த புலிக்குகையை மாமல்லபுரம் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் நேற்று மதியம் உதவி கமாண்டண்ட் ராஜா மற்றும் 5க்கும் மேற்பட்ட காமாண்டோ வீரர்கள் புலிக்குகையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் வருகை, எத்தனை மணிக்கு திறக்கப்படுகிறது. எவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். நுழைவாயிலில் காவலர்கள் செயல்படும் விதம் ஆகியவை குறித்து, தொல்லியல் துறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.
Tags:
Mamallapuram Tiger Cage Commando Force Soldiers Study மாமல்லபுரம் புலிக்குகை கமாண்டோ படை வீரர்கள் ஆய்வுமேலும் செய்திகள்
அதிமுக பொதுக்குழுவில் பெரும் தொகை பட்டுவாடா: எடப்பாடிக்கு மெஜாரிட்டி கிடைத்த ரகசியத்தை அம்பலபடுத்தினார் புதுச்சேரி மாநில செயலாளர்
கைதி மாயம்: சேலம் சிறை அதிகாரியிடம் 3 மணி நேரம் விசாரணை
கூட்டுறவுத்துறையில் அதிமுக ஆட்சியில் ரூ780 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
ரூ700 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை
நள்ளிரவில் மருந்து கிடைக்காமல் தவித்த இலங்கை டாக்டருக்கு உதவிய திருச்செந்தூர் போலீஸ்காரர்: பாராட்டு குவிகிறது
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காதுகேளாதோர் காத்திருப்பு போராட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்