ஓபிஎஸ், இபிஎஸ் மீது ஆணையத்தில் புகார்
2021-12-16@ 00:20:28

புதுடெல்லி: நடத்தப்பட்ட அதிமுக உட்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி புகார் மனு கொடுத்துள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியின் சட்ட விதிகளில் மாற்றம் செய்துள்ளனர். அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.
மேலும் அ.தி.மு.கவின் விதிகளை திருத்தியது சட்டத்திற்கு முரணானது. இதில் அதிமுக கட்சியில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. அனைத்து சட்ட விதிகளும் மீறப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான முறைகேடுகளும் நடந்துள்ளது. இதில் கட்சி உறுப்பினர்கள் யாருடைய மனுவையும் பெறாமல் போட்டியின்றி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதாக கடந்த 6ம் தேதி அறிவித்தனர். அதனால் இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு தலைமை தேர்தல் ஆணையம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சொல்லிட்டாங்க...
காஞ்சிபுரம் 36வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு: நாமக்கல்லில் 3ம் தேதி நடக்கிறது
அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுக்கள் பரிசீலனை; பாஜக கூட்டணி வேட்பாளர், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மனு ஏற்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்