திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தேர் வீதியுலா: அமைச்சர் சேகர்பாபு வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
2021-12-15@ 00:03:01

சென்னை: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.11.58 லட்சம் செலவில் சீர்செய்யப்பட்டு தங்கத்தேரை வடம்பிடித்து அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வெள்ளித்தேர் ரூ. 18.30 லட்சம் செலவில் தயார் செய்யும் பணியினையும் அவர் தொடங்கி வைத்தார். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் தங்கரதம் கடந்த 1972ம் ஆண்டு செய்யப்பட்டது. இத்தங்கத்தேர் பல வருடங்களாக பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்நிலையில் தங்கத்தேரின் மரபாகங்கள் பழுது அடைந்ததால் உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. தங்கரதத்தில் உள்ள பழுதுகளை நீக்க ஏதுவாக 23.3.2017 அன்று தங்கரதத்தில் தங்கரேக் பதிக்கப்பட்ட தகடுகளை குடைகலசம் முதல் சுவாமிபீடம் வரை உள்ள செப்புத்தகடுகள் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இக்கோயிலில் 2.7.2021 அன்று ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்துள்ள தங்கரதத்தின் பணிகளை விரைந்து முடித்து திருத்தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார்.
அதன்படி ரூ. 4.75 லட்சம் செலவில் மரத்தால் ஆன தேர் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு, தங்கரேக் பதித்த செப்பு உலோகத் தகடுகள் பொருத்துவதற்கு ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டிலும், தங்கத்தேருக்கான மின் அலங்காரம் செய்யும் பணி ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டிலும், தங்கத்தேர் மண்டபத்திற்கான ரோலிங் ஷட்டர் சீரமைக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.11.58 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு தங்கத்தேர் சீரமைக்கப்பட்டுள்ளது. தங்கத்தேரை வடம்பிடித்து அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வெள்ளித்தேர் ரூ. 18.30 லட்சம் செலவில் தயார் செய்யும் பணியினையும் அவர் தொடங்கி வைத்தார்.
Tags:
Thiruthani Subramania Swamy Temple 4 years Thangather Veediula Minister Sekarbabu திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் 4 ஆண்டு தங்கத்தேர் வீதியுலா அமைச்சர் சேகர்பாபுமேலும் செய்திகள்
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம் :முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்து!!
பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்..உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
ஜூலை 01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
ஓபிஎஸ் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டி; கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி
பெரியபாளையம் பவானியம்மனுக்கு காணிக்கையாக வந்த 130 கிலோ பொன் நகைளை அமைச்சர் சேகர்பாபு வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தார்
வானகரத்தில் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்; பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கியது
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்