சென்னை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சுடுநீர் வசதி
2021-12-15@ 00:02:35

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் குறைகளை கண்டறிய அனைத்து வார்டுகளிலும், ஆலோசனை பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதில் பெறப்பட்ட கடிதத்தில் நோயாளிகளுக்கு அனைத்து வார்டுகளிலும், சுடுநீர் வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்த வேண்டுகோள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அரசின் வழிக்காட்டுதலின்படி, 115 சுடுநீர் கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது, அடுக்குமாடி ஏ பிளாக், பி பிளாக், சி பிளாக்குகளில் சுடுநீர் கருவிகள் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளது. கல்லீரல், முடக்குவாதம், சிறுநீரகம், நரம்பியல், இதயவியல் உள்ளிட்ட பிரிவுகளில், இதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது பொருத்தப்பட்டுள்ள இடங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 முதல் 8 மணி வரையிலும் சுடுநீர் பிடித்து பயன்படுத்தலாம்.
Tags:
Chennai Government General Hospital Patient Hot Water Facility சென்னை அரசு பொது மருத்துவமனை நோயாளி சுடுநீர் வசதிமேலும் செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 118 வளர்ச்சி பணிகள் நிறைவு: அதிகாரிகள் தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
மின்வாரிய குறைதீர் கூட்டம்
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து: வாகன ஓட்டிகள் கடும் அவதி
சியுஇடி நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
பத்திரப்பதிவுத்துறையில் 12 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!