அயோத்திகுப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 4வது மாடியில் இருந்து வீசி சிப்பிப்பாறை நாய் கொலை: உரிமையாளர் புகாரில் போதை வாலிபர் கைது
2021-12-10@ 00:04:07

சென்னை: அயோத்திகுப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் விளையாடுவது போல் நடித்து, 4வது மாடியில் இருந்து வீசி சிப்பிப்பாறை நாயை கொன்ற போதை ஆசாமி ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயோத்தி குப்பம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரவீன் (24). இவர், சிப்பிப்பாறை வகையை சேர்ந்த நாய் ஒன்றை விலைக்கு வாங்கி தனது வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். அந்த நாய், பிரவீன் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளது. இதனால் பிரவீன் குடியிருக்கும் பகுதியில் வெளியாட்கள் யார் வந்தாலும் அவர்களை உள்ளே அனுமதிக்காது.
இது வெளியில் இருந்து குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு வரும் நபர்களுக்கு தடையாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குடியிருப்பின் 4வது மாடியில் தனது குடும்பத்தினருடன் நாய் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது, வெளியில் இருந்து நண்பர்களை பார்க்க வந்த சிலர் குடிபோதையில் நாய்க்கு பிஸ்கெட் கொடுத்து விளையாடியுள்ளனர். அப்போது நாயிடம் விளையாடிய போதை நபர் பழிவாங்கும் நோக்கில், நாயை தூக்கி நான்காவது மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார். இதில் தலையில் அடிபட்டு நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் தனது நாயை கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிடமும் புகார் அளித்தார். அப்போது குற்றவாளிகளை போலீசார் கைது செய்யும் வரை எனது நாய்க்கு இறுதி சடங்கு செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக பிரவீன் இருந்துள்ளார். அதைதொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடிபோதையில் நாயை 4வது மாடியில் இருந்து வீசி கொன்ற சேப்பாக்கம் லாக்நகரை சேர்ந்த ஸ்டேர்லின் (35) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அயோத்தி குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
Ayodhya Kuppam Slum Board 4th Floor Oyster Dog Murder அயோத்திகுப்பம் குடிசைமாற்று வாரிய 4வது மாடி சிப்பிப்பாறை நாய் கொலைமேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது
தஞ்சை அருகே பழங்கால உலோக சிலைகள் பறிமுதல்: 2 பேர் கைது..!!
மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவன்...தட்டிக்கேட்ட மகனை பீர்பாட்டிலால் குத்தியதால் மனைவி ஆத்திரம்!!
அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஏட்டுவை தாக்கிய போதை ஆசாமிகள்; 3 பேர் கைது
மேலூர் அருகே பயங்கரம், காதலித்து திருமணம் செய்த இளம்பெண் எரித்து கொலை: 3-வது திருமணம் செய்த கணவர், பெற்றோருடன் கைது
ஐபிஎஸ் அதிகாரி என கூறி ரூ. 6 லட்சம் மோசடி: சென்னை தொழிலதிபரை ஏமாற்றிய 2 பேருக்கு வலை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!