திருச்சி அருகே 3 நாளாக கழுத்தளவு நீரில் குதிரைகள் தவிப்பு
2021-12-09@ 14:09:13

திருச்சி: திருச்சி அருகே 3 நாளாக கழுத்தளவு தண்ணீரில் 2 குதிரைகள் தவித்து வருகின்றன. மணப்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. இதனால் அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடமுருட்டி ஆறு, கோரையாற்றில் அதிகளவில் தண்ணீர் வந்து தீரன்நகர், பிராட்டியூர் பகுதியில் உள்ள வீடுகள், வயல்வெளிகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இந்நிலையில் திருச்சி குழுமணி சாலை காசிவிளங்கி மீன் மார்க்கெட் அருகில் உள்ள கோரையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் பாய்ந்தோடியது.
மீன் மார்க்கெட் அருகே உள்ள மைதானத்தையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த மைதானம் அருகே 2 குதிரைகள் கட்டப்பட்டிருந்தது. மைதானத்தை வெள்ளநீர் சூழ்ந்த நிலையிலும் அந்த குதிரைகளை அவிழ்த்து ஓட்டி செல்ல யாரும் வரவில்லை. இதனால் கழுத்தளவு தண்ணீரில் கடந்த 3 நாட்களாக குதிரைகள் தவித்து வருகின்றன. இந்த குதிரைகளை அவிழ்த்து விட்டு காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை