ஜெர்மனி புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு
2021-12-09@ 00:57:53

பெர்லின்: ஜெர்மனியின் புதிய அதிபராக ஓலாப் சோல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக கடந்த 2005ம் ஆண்டு பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து 16 ஆண்டுகளாக இப்பதவியை வகித்து வந்தார். உலகின் சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மெர்க்கல் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெர்க்கலின் கட்சியும் குறைந்த இடங்களை மட்டுமே பிடித்தது. இதனை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறது. நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஓலாப் சோல்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 736 உறுப்பினர்களில், ஜனநாயக கட்சி கூட்டணிக்கு மொத்தம் 416 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 395 எம்பி.க்கள் சோல்சுக்கு ஆதரவாக நேற்று வாக்களித்தனர். இதனை தொடர்ந்து ஓலாப் புதிய அதிபராகிறார்.
மேலும் செய்திகள்
இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.46 கோடி ஆக அதிகரிப்பு!
மக்கள் கோபத்தால் பதுங்கி இருந்த நிலையில் வெளியில் வந்தார் மகிந்த ராஜபக்சே: நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்
1000 உக்ரைன் வீரர்கள் சரண் ரஷ்யா வசமானது மரியுபோல் நகரம்
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றம் வந்தார் மகிந்த ராஜபக்சே
‘கேன்ஸ்’ சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது பாசிஸ்டுகளை விமர்சிக்க புது சார்லி சாப்ளின் தேவை: நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!