கோயில் நிலங்கள் குத்தகை விடுவதை எதிர்த்த வழக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்: ஐகோர்ட்டில் அரசு பதில்
2021-12-09@ 00:24:32

சென்னை: தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள விஜய வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பாபுராயன் பேட்டையில் 250 ஏக்கர் நிலத்தை ஏலம் மூலம் குத்தகைக்கு விட கடந்த நவம்பர் 24ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர்கள் இல்லாத நிலையில் கோயில் சொத்துக்களை ஏலம் விடக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவித்தார். இதையடுத்து, ஏல நடவடிக்கைகளை தொடர அனுமதியளித்த நீதிபதிகள், ஏலத்தை இறுதி செய்யக் கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் செய்திகள்
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்