உத்தர பிரதேசத்தில் பெண்களுக்காக காங். தனி தேர்தல் வாக்குறுதி: மாணவிகளுக்கு இலவச போன், ஸ்கூட்டர்
2021-12-09@ 00:15:44

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண்களுக்காக காங்கிரஸ் தனியாக தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்க, பாஜ முயற்சி மேற்கொண்டுள்ளது. அதே நேரம், காங்கிரசும் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், இம்மாநில பெண்களுக்காக காங்கிரஸ் தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதை வெளியிட்டு, லக்னோவில் பிரியங்கா காந்தி பேசியதாவது: பெண்களுக்கு சம உரிமை, மதிப்பு அளிக்கப்படும் போதுதான் பெண்களுக்கு அதிகாரமளித்தல் சாத்தியமாகிறது. பெண்களுக்கு சம உரிமை, மதிப்பு அளிக்க காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது. இதனால்தான், சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீத சீட்களை ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரஸ் தான் முதல் பெண் பிரதமர், முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானி ஆகியோரை நாட்டிற்கு அளித்தது. உத்தர பிரதேச மாணவிகளுக்கு கல்வி எளிதில் கிடைக்க கூடிய வகையில் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளன. காங்கிரசின் கொள்கைகள் மட்டுமே பெண்களுக்கு அதிகாரம் அளிக்க கூடியதாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
* யோகிக்கு தெரியுமா?
உபி.யில் மீண்டும் பாஜ ஆட்சி அமைந்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கோயிலுக்கு வெளியே கரசேவை செய்து கொண்டிருப்பார்கள் என்று முதல்வர் யோகி கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரியங்கா, ``கோயிலுக்கு செல்ல தொடங்கியதில் இருந்து நான் எந்த கோயிலுக்கு போகிறேன் என்பது யோகிக்கு தெரியுமா? எனது 14 வயதில் இருந்து விரதம் இருப்பதை அறிவாரா? அவருக்கு வேறு என்ன தெரியும்? எனது மதம், நம்பிக்கை குறித்து அவர் சான்று அளிப்பாரா? அந்த சான்று எனக்கு தேவையில்லை,’’ என்றார்.
Tags:
Uttar Pradesh for Women Cong. Separate election promise student free phone scooter உத்தர பிரதேச பெண்களுக்காக காங். தனி தேர்தல் வாக்குறுதி மாணவி இலவச போன் ஸ்கூட்டர்மேலும் செய்திகள்
ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு
சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்
31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி
சொல்லிட்டாங்க...
மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்