குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில்14 பேரில் 13 பேர் உயிரிழப்பு: சடலங்களை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரம்..!
2021-12-08@ 17:16:51

டெல்லி: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். ஏற்கனவே 7 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் பிபின் ராவத் நிலை குறித்து தெரியவில்லை. அவரது மனைவி மதுலிக்கா ராவத் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் உணவகத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..!!
ஏற்காட்டில் களைகட்டிய மலர் கண்காட்சி!: 25,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!
பசுமை பயண விழிப்புணர்வு: அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பு
திருக்கண்டலம் கிராமத்தில் ஸ்ரீபாமா ருக்மணி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பொதுமக்கள் பங்கேற்பு
திருத்தணி முருகன் கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!