சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்தார் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்: மக்கள் பாராட்டு
2021-12-08@ 15:04:20

நாகை: நாகை மாவட்ட ஆட்சியர் சுற்றுச்சுழல் மாசுப்படுவதை தடுக்கும் விதமாக நாகையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் தற்போது காற்று மாசு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் புழுதி காணப்படுவதால் வாகனங்களில் செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடையாமல் தடுக்க அனைத்து பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இருசக்கர வாகனங்களிலோ, கார் உள்ளிட்ட வாகனங்களிலோ அலுவலகம் வரக்கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதற்கு மாற்றாக பொது போக்குவரத்தையோ, நடந்தோ அல்லது சைக்கிளிலோ அலுவலகம் வர பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் மிதிவண்டியில் சென்றுள்ளார். காடம்பாடி பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள இல்லத்தில் இருந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்தடைந்தார். மாவட்ட ஆட்சியரோடு அதிகாரிகளும் ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தடைந்தனர்.
சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க உள்ளூரில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் வாகனம் வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவரும் காலை மாலை என இரு வேலை சுமார் 5 அல்லது 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கூறினார். மாவட்ட ஆட்சியர் சைக்கிளில் வருவதை கண்ட பொது மக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். அவர்களும் இது போன்று சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஈடுபடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ட்விட்டர் வாயிலாக மாணவர்களுக்கு பதில் அளித்து சுவாரசியம் ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொரு மாவட்ட ஆட்சியர் மக்களை கவரும் வகையில் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!