12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது முன்னுதாரணம் அற்றது; ஏற்க முடியாதது: காங். தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம்
2021-12-08@ 13:02:49

டெல்லி: 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். அச்சமயம் 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம், விவசாயிகள் போராட்டம், நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய சோனியா காந்தி, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அரசியலமைப்பு மற்றும் விதிகள் இரண்டையும் மீறுவதாக கூறினார்.
12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்றும் சோனியா குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்ததாகவும், அவை மரபுகளை மீறிவிட்டதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள், சிவசேனா கட்சி 2 பேர், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் என மொத்தம் 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்