நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியதால் 49,000 பேருக்கு எதிர்விளைவுகள்... 946 பேர் உயிரிழப்பு : ஒன்றிய அரசு தகவல்!!
2021-12-08@ 12:46:37

டெல்லி : நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியதால் 49,000 பேருக்கு எதிர்விளைவுகள் ஏற்பட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்த தொடங்கிய நாள் முதல் கடந்த 30ம் தேதி வரை, நாடு முழுவதும் 123.25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களில் 49,819 பேருக்கு எதிர் விளைவு ஏற்பட்டதாகவும் 0.4% பேருக்கு மட்டும் எதிர்விளைவு ஏற்பட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
எதிர் விளைவுஅனைத்தும் தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்டவை என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ள அரசு, அதேநேரம், மொத்த பாதிப்புகளில் 47 ஆயிரத்து 691 லேசானவை, 163 தீவிரமானவை, ஆயிரத்து 965 மோசமானவை ஆகும் என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு 946 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 1,019 பேர் தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 89 மரணங்களும் எவ்வாறு நிகழ்ந்தவை என பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, 4 மரணங்கள் தடுப்பூசி சார்ந்தவை, 58 தற்செயலானவை, 16 வரையறுக்க முடியாதவை மற்றும் 11 வகைப்படுத்த முடியாதவை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
குர்ஆனை வீட்டில் மட்டும் சொல்லிக் கொடுங்கள் மதரஸா வார்த்தைக்கே முடிவு கட்ட வேண்டும்: அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு
பஞ்சாப்பில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி: அதிர்ச்சித் தகவல் வெளியீடு
தமிழகம், கர்நாடகா, கேரளாவிலிருந்து பக்தர்கள் வருகை ஏழுமலையானை தரிசிக்க 7 மணி நேரம் காத்திப்பு
கர்நாடகாவில் பரபரப்பு அணைக்கட்டில் இருந்து தவறி விழுந்த வாலிபர்
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
சீனர்களுக்கு விசா பெற்ற விவகாரம் கைதான ஆடிட்டருக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை