ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 விழுக்காடாகவே தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
2021-12-08@ 11:42:39

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், 2021 - 22ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 விழுக்காடாக இருக்கும் என்றும் 2022 - 23ல் 17.2 விழுக்காடாக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் பல்வேறு மாநிலங்களின் வாட் வரி குறைப்பு நடவடிக்கையால் நுகர்வு அதிகரித்திருப்பதாக கூறிய சக்தி காந்த தாஸ், இதனால் தேவை அதிகரித்திருப்பதாக கூறினார். வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 9வது முறையாக மாற்றமின்றி 4 சதவீதமாக தொடர்வதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவிகிதமாக தொடர்வதாகவும் சக்தி காந்த தாஸ் அறிவித்தார். 5வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்