2018-2019ம் நிதி ஆண்டிற்கு பிறகு புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை :நிதியமைச்சகம்
2021-12-08@ 11:23:54

டெல்லி : 2018-2019ம் நிதி ஆண்டிற்கு பிறகு புதிதாக ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கறுப்பு பணத்தை தடுக்கும் வகையில், 2016 நவம்பர் 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.அதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.இந்த நிலையில் மாநிலங்களவையில் நாட்டில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்த கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார்.
அதன்படி 6,72,600 ரூபாய் மதிப்பிலான 3363 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே ரிசர்வ் வங்கி அச்சடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 2,233 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் 1.75% மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகள் என்றும் 2018-2019ம் நிதியாண்டிற்கு பிறகு புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான தேவையும் ஏற்படவில்லை என்றும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது. .
Tags:
நிதியமைச்சகம்மேலும் செய்திகள்
டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
வாடிக்கையாளராக நடித்த போலீஸ்காரரிடம் கேள்வி 11 பெண்களில் யார் உங்களுக்கு வேணும்?: மசாஜ் சென்டர் நிர்வாகி உட்பட 12 பேர் கைது
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உதவியுடன் ரயில் தண்டவாளங்களை தகர்க்க சதி திட்டம்: மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த மதுவை போட்டிபோட்டு அள்ளிச்சென்ற குடிமகன்கள்: உறவினர்கள், நண்பர்களையும் வரவழைத்து உற்சாகம்
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்; சிறப்பு உரிமை குழு முன் பெண் எம்பி ஆஜர்.! சபாநாயகரின் அனுமதியை தொடர்ந்து நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை