இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க நோட்டரி பப்ளிக் சட்டத்தில் திருத்தம்: வரைவு மசோதா வெளியீடு
2021-12-08@ 00:06:25

புதுடெல்லி: இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் நோட்டரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய நோட்டரி சட்டம் 1952-ன்படி, நோட்டரி பப்ளிக் ஆக உரிமை பெறுபவர் எத்தனை ஆண்டுகளானாலும் செயல்பட முடியும். அதனை தற்போது செய்யப்பட உள்ள திருத்தத்தின் மூலம், பதிவு செய்த முதல் 5 ஆண்டுகள், பிறகு 2 புதுப்பித்தலுக்கு தலா 5 ஆண்டுகள் வீதம் 10 ஆண்டுகள் என மொத்தம் 15 ஆண்டுகள் மட்டுமே நோட்டரி பப்ளிக்காக செயல்பட முடியும். இதனால், இளைஞர்கள் நோட்டரி பப்ளிக்காக உருவாக புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
நோட்டரி பப்ளிக் மேற்கொள்ளும் நோட்டரி பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. முறைகேடுகளில் ஈடுபடும் நோட்டரி பப்ளிக் ஆக பணியாற்றுபவர்களின் சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சட்ட விவகாரத்துறையின் இணையதளப் பக்கத்தில் இச்சட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 15ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!