பண்ருட்டியில் பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை
2021-12-07@ 19:01:00

பண்ருட்டி: பண்ருட்டி பிடிஎஸ் மணி நகரில் கடந்த 15 வருடத்திற்கு முன்பு மக்கள்தொகை பெருக்கத்தாலும், இட நெருக்கடியாலும் பொதுமக்கள் வெளியில் சென்று இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு பண்ருட்டி நகராட்சியின் மூலம் அவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் பொது சுகாதார வளாக மையம் அமைத்து கொடுத்தது.
அது சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் மன நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியின் போது அதிகாரிகள் அவைகளை கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்த சுகாதார வளாகம் பாழடைந்து, முட்புதர்கள் மண்டி போனது.
இதுபோன்று திருவதிகை, பண்ருட்டி அங்காளம்மன் கோவில் தெரு என பல இடங்களில் பொது சுகாதார கழிப்பிடங்கள் பாழடைந்து கிடக்கிறது. இதனால் லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீண் அடிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவைகளை அடையாளம் கண்டு கணக்கீடு செய்து மறுசீரமைப்பின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை