போதை பொருள் பயன்படுத்தும் சிறார்களை விளம்பரப்படுத்துவது தவறு: திமுக எம்பி தயாநிதி மாறன் பேச்சு
2021-12-07@ 18:01:48

புதுடெல்லி: போதை பொருள் பயன்படுத்தும் சிறார்களை விளம்பரப்படுத்துவது தவறு என்றும், அவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசினார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசுகையில், ‘போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் சிறார்களை குற்றவாளிகளாக பார்க்காமல், அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கருத வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சரியான முடிவை எடுத்துள்ளது. அதற்கு எனது பாராட்டுகள். இந்த அவையில் உள்துறை அமைச்சர் உள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் போதை ெபாருள் கட்டுப்பாட்டு அமைப்பானது, உள்துறை அமைச்சகத்தின் கொள்கையில் இருந்து மாற்றுப் பாதையில் செல்வதாக தெரிகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் போதைப்பொருள் உட்கொண்டாரா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்தாமல் கூட, சிறுசிறு சம்பவங்களில் கூட பரபரப்பை ஏற்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் சிறார்கள் கைது செய்யப்படுவதை விளம்பரம் செய்கிறது; இதன் மூலம் தவறான செய்தி மக்களை சென்றடைகிறது. போதைப் பொருள் பயன்படுத்துவோர் ெதாடர்பான புள்ளி விபரங்கள் மாநிலம் வாரியாக வழங்க முடியுமா?
அனைத்து மாநிலங்களிலும் போதைப் பொருள் பயன்படுத்துவோர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த முடியுமா? போதைப்பொருள் பயன்பாடு சம்பவங்களை மாநிலம் வாரியாக பார்த்தால், பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே உரிய புள்ளி விபரங்கள் கிடைத்தால் கல்வியின் மூலம் அவர்களுக்கு உதவிட முடியும்’ என்று பேசினார்.
மேலும் செய்திகள்
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 2,226 பேருக்கு கொரோனா.. 65 பேர் உயிரிழப்பு.. 2,202 பேர் குணமடைந்தனர்!!
மகளுக்கு முறைகேடாக வேலை மேற்கு வங்க அமைச்சரிடம் சிபிஐ 3ம் நாள் விசாரணை
நடிகர் விஜய் பாபுவை கைது செய்ய உதவுமாறு வெளிநாட்டு தூதரகங்களுக்கு கேரள போலீஸ் கடிதம்
ஜூனியர் என்டிஆர் படம் தீபிகா மறுத்தது ஏன்?
‘உன் பெயர் முகமது தானே...’ மனநிலை பாதித்தவரை தாக்கிய பாஜ நிர்வாகி: சடலமாக கிடந்ததால் பரபரப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்