நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மநீம பணிக்குழு நியமனம்: கமல்ஹாசன் அறிவிப்பு
2021-12-07@ 17:59:41

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்த சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு, துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா தலைமையில் மாநில தேர்தல் தலைமை பணிக் குழு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை அறிவிக்கிறேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பொறுப்பாளர்கள் விவரம்: ஏ.ஜி.மெளரியா - துணைத் தலைவர் (கட்டமைப்பு).
ஆர்.தங்கவேலு - துணைத் தலைவர் (களப்பணி மற்றும் செயல்படுத்துதல்). பிரியா சேதுபதி - நிர்வாகக் குழு உறுப்பினர். சிவ.இளங்கோ - மாநிலச் செயலாளர் (கட்டமைப்பு). செந்தில் ஆறுமுகம் - மாநிலச் செயலாளர் (ஊடகம், தகவல் தொடர்பு). சரத்பாபு ஏழுமலை - மாநிலச் செயலாளர் (தலைமையகம்). நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள், இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் செய்திகள்
இரட்டை இலை சின்னம் பெற இறங்கி வந்த ஓபிஎஸ்: கடிதத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிசாமி..!
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டி யஷ்வந்த் சின்கா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
உள்ளாட்சி தேர்தல் படிவத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக எடப்பாடிக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது: பெங்களூர் புகழேந்தி கடிதம்
மாவட்ட செயலாளர்கள் உட்பட 99 % பேர் இபிஎஸ்-க்கு தான் ஆதரவு: முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தகவல்
திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;