குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை
2021-12-07@ 17:49:50

குளித்தலை: குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர் குளித்தலை - மணப்பாறை சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதாக தெரிவித்தார்.
ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு விரைவாக செல்ல முடியாமல் அண்மையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பாரிவேந்தர் தெரிவித்தார். எனவே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், மருத்துவமனைகளுக்கு மக்கள் விரைவாக செல்ல முடியும் என்றும் பாரிவேந்தர் விளக்கினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து ரயில்வே மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்
விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்-பரிசோதனை அதிகாரி அறிவுறுத்தல்
திருச்சுழி பெரிய கண்மாயை ஆக்கிரமித்த கருவேலம் மரங்கள் விவசாயத்திற்கு போடுது முட்டுக்கட்டை-தூர்வார விவசாயிகள் கோரிக்கை
சிவகாசி பகுதிகளில் பயன்பாட்டில் பாலிதீன்: தடை இருந்தும் தாராளம்-உணவுத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
மேட்டுமகாதானபுரத்தில் லாரியில் இருந்து சாலையில் சிதறும் கலவை மணலால் டூவீலர்கள் சறுக்கி விபத்து அபாயம்
நெகமத்தில் குதிரை பந்தயம்
கிணத்துக்கடவு அருகே நரிக்குறவர் காலனியில் பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தர கோரிக்கை
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்