பாதி மன்னிப்பு அளிக்கிறேன்!: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்தார் ராணுவ தளபதி..!!
2021-12-07@ 10:11:39

யங்கூன்: மியான்மரில் மனித உரிமை போராளியாக அறியப்படும் ஆங் சான் சூகிக்கு நேற்று ராணுவ நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அவரை விடுதலை செய்யக்கோரி மியான்மர் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான 76 வயதான ஆங் சான் சூகியை கடந்த 10 மாதங்களாக அந்த நாட்டு ராணுவம் வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளது.
இவர் மீது வாக்கி டாக்கி இறக்குமதி ஊழல் வழக்கு, ராணுவத்திற்கு எதிராக பேசியதாக தேச துரோக வழக்கு, கொரோனா விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக வழக்கு என்று பல வழக்குகள் சுமத்தப்பட்டன. நேற்று இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மியான்மர் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில் 2015ம் ஆண்டு ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி ஆட்சியை பிடித்தது.
பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலிலும் ஆங் சான் சூகியின் கட்சி அமோக வெற்றிபெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி ஆங் சான் சூகி மற்றும் அதிபர் உள்ளிட்டோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜனநாயகத்திற்காக 20 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஆங் சான் சூகி. இவருக்கு நேற்று 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், உலக நாடுகளின் கண்டனத்தை தொடர்ந்து பாதி மன்னிப்பு அளிப்பதாக கூறியிருக்கும் ராணுவ தளபதி, தண்டனை காலத்தை 2 ஆண்டுகள் குறைப்பதாக அறிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகள்
ஆஸ்திரேலிய பிரதமராக அல்பானீஸ் பதவியேற்பு
பிலிப்பைன்சில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு: 7 பேர் பலி
தைவானை பாதுகாக்க சீனாவுடன் போருக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு
அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் 21வது சட்டத்திருத்தம் தாக்கல்: இலங்கை பிரதமர் ரணில் தகவல்
ரஷ்ய பிரதிநிதிகளால் தாக்கப்பட்டார் அதிபர் புடினை கொல்ல முயற்சி: உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவலால் பரபரப்பு
உலகம் முழுவதும் 10 கோடி பேர் அகதிகளாகினர்: ஐநா அதிர்ச்சி தகவல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை