குளத்தை மூடி விவசாயம் ரூ.1 கோடி அரசு நிலம் மீட்பு
2021-12-07@ 00:02:28

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சீயட்டி காரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நீர்நிலை புறம்போக்கு நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் மீட்டனர். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழை காலங்களில், பெரும் சேதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது.இதைதொடர்ந்து, தமிழகத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அதிகாரிகள் அனைத்து நீர் நிலைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தவேளையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் சீயட்டி காரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 106/1 ல் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் குளம் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த குளத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்து, குளத்தை மூடி விவசாய நிலமாக பயிர் செய்வது தெரிந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய் துறையினர், நேற்று மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம், சமன் செய்யப்பட்டு நிலமாக இருந்த பகுதியை மீண்டும் குளமாக மாற்றும் பணியைத் தொடங்கினர்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டத்தில் விஏஓவாக வேலை செய்வது தெரிந்தது. அரசு ஊழியராக வேலை பார்ப்பவர், வருவாய்த்துறை அலுவலர் களை அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு பணிகளை, காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமி, தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை