ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
2021-12-07@ 00:02:14

பள்ளிப்பட்டு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்படுவாக கூறி ஆசிரியர்களை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே சமீப காலமாக அடிக்கடி மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், மாணவிகளை, மாணவர்கள் கேலி, கிண்டல் செய்வதும் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்வதும் தொடர் கதையாகி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் பெற்றோர் பலமுறை புகார் செய்துள்ளனர். இருப்பினும், ஆசிரியர்கள் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் என 200க்கும் மேற்பட்டோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
மேலும் செய்திகள்
மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!