திருப்பதி-திருமலை மலைப்பாதையில் நவீன தொழில்நுட்பத்துடன் நிலச்சரிவை சீரமைக்க நடவடிக்கை: கேரள நிபுணர்கள் குழுவினர் ஆய்வு
2021-12-06@ 20:09:55

திருமலை: திருப்பதி-திருமலை மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை மறுசீரமைக்க நவீன அறிவியல் தொழில்நுட்பம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள நிபுணர்கள் குழுவினர் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. மேலும், பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதையடுத்து, மண் சரிவு ஏற்பட்ட இடங்களை டெல்லி மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் திருப்பதி 2வது மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்து சேதமடைந்த இடத்தை கேரள மாநிலம், கொல்லம் அமிர்தா பல்கலைக்கழகத்தில் உள்ள பேரிடர் நிலச்சரிவு ஆய்வு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வு குழுவினர் கூறுகையில், ‘பாறைகள் சரிந்து விழுந்த இடத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிலச்சரிவை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளை மறுசீரமைக்க நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேவஸ்தானத்திற்கு விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை தர உள்ளோம்’ என்றனர்.
ஆய்வின்போது, நிபுணர்கள் குழு பேராசிரியர்கள் மனிஷா, நிர்மலா வாசுதேவன், சுதேஷ் வித்வான், தேவஸ்தான வன அலுவலர் ஸ்ரீனிவாஸ், செயற் பொறியாளர் சுரேந்திரநாத், வனச்சரகர் வெங்கடசுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
கனமழையால் மோசமான வானிலை!: சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து..பயணிகள் தவிப்பு..!!
கர்நாடகாவில் அணையின் சுவற்றில் ஏற முயன்று 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!