'சென்னை ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதிப்படுத்துக'!: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை..!!
2021-12-06@ 17:02:58

டெல்லி: சென்னை ஐஐடி-யில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை ஒன்றிய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி-யில் கடந்த மாதம் 20ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. மேலும் சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தின் போது பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை ஐஐடி-யில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் இது மாநில அரசின் மரபை மீறும் செயல் என்றும் அவர் சாடினார். 1970ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து, அனைத்து அரசு விழாக்களிலும் பாடப்படுவது வழக்கமாகும். இதனை ஐஐடி தொடர்ந்து மீறி வருவதாக தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம்சாட்டினார். இனி வரும் காலங்களில் ஐஐடி-யில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை ன்றிய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது; 2018ம் ஆண்டிலும் ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் பாடல் பாடப்பட்டது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அனைத்து மொழிகளையும் விரும்புகிறோம். ஆனால் தமிழை தொழுகிறோம். அதனால் சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை குறிப்பிட்ட அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகள்
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
பேரறிவாளன் விடுதலை காங்கிரஸ் கண்டனம்
நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அமைச்சர்களிடம் திமுக எம்பி.க்கள் மனு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!