தாம்பரம் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வலியுறுத்தல்: ஆணையரிடம் மனு
2021-12-06@ 16:27:04

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பூங்கா, சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட 7 அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று மாநகராட்சி ஆணையரை சந்தித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் நகராட்சிகளும் பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, சமீபத்தில் தமிழகத்தின் 20வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு உள்ளது. இம்மாநகராட்சியின் முதல் ஆணையராக டாக்டர் எம்.இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்று உள்ளார்.
இந்நிலையில், பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையம் சார்பில் செயலாளர் சி.முருகையன், தலைவர் எம்.சி.பலராமன், பொருளாளர் சி.அரசி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனை நேரில் சந்தித்தனர். அப்போது தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். அம்மனுவில், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தேவையான நீர்வழித் தடங்களை பாதுகாக்கவும், சேதமான சாலைகளை செப்பனிடவும், மழைநீர் மற்றும் பாதாள சாக்கடை கால்வாய்களை முறையாக பராமரிப்பு செய்திடவும், அனைத்து பூங்காக்கள் பராமரிப்பு, சீரான குடிநீர் வினியோகம்,
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுதல், குறிப்பிட்ட இடைவெளியில் மக்களின் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்பட 7 கோரிக்கைகளை நலச்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தங்களின் பகுதிகளில் உள்ள குறைகளை போன், வாட்ஸ்அப், இமெயில் ஆகியவற்றின் மூலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்து, உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். தாமதமாகும் பணிகள் குறித்து என் பார்வைக்கு வரும்போது, அதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பேன் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உறுதி தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்