பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாட்டின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்..நெல்லையில் 1500 கடைகள் அடைப்பு..!!
2021-12-06@ 15:28:14

நெல்லை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மேலப்பாளையம் பகுதி முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பாபர் மசூதி எழும் வரை போராட்டம் ஓயாது என்று முழக்கமிட்டனர். கோவையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் துறையினரிடம் பரிசு பெட்டி கொடுத்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வந்த பரிசு பெட்டியால் சந்தேகமடைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்த போது அதில் உலர் பழங்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
மின் மோட்டார் கேபிள் திருட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டில் பயன்படுத்திய இரும்பு கட்டில்கள் திறந்தவெளியில் வீச்சு- மறு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
மாதனூர்- உள்ளி இடையே பாலாற்றில் ஆபத்தான பைப் பயணத்தில் கிராம மக்கள்
கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் மின் கம்பியில் மண்டி கிடக்கும் செடி கொடிகள்-நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!