அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான்!: சசிகலா, டி.டி.வி. தினகரன் இனி இணைய முடியாது...கடம்பூர் ராஜூ திட்டவட்டம்..!!
2021-12-06@ 15:14:32

சென்னை: அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்று அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், கட்சியின் இரட்டை தலைமை குறித்து செயற்குழுவை தொடர்ந்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். சசிகலா, டி.டி.வி. தினகரன் அதிமுகவில் இனி இணைய வாய்ப்பில்லை என்று கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து கடம்பூர் ராஜூ பேசியதாவது, நாடாளுமன்ற பொதுத்தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல், கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் இரட்டை தலைமையை ஏற்றுக்கொண்டு, இரட்டை தலைமையே வழிநடத்தி இன்று தேர்தலை சந்தித்து வருகிறோம்.
இனிமேல் இரட்டை தலைமை தான் எங்களுக்கு வழி என்ற நிலைப்பாட்டிலேயே ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதிமுகவில் புதிய விதி கொண்டு வரப்பட்டு கட்சியை கட்டுப்படுத்தும் இரு பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். சசிகலா குறித்தான கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, சசிகலா, டி.டி.வி. தினகரன் அதிமுகவில் இனி இணைய முடியாது. ஜெயலலிதாவை தவிர பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு யாரும் கிடையாது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இனி வருவது நடக்காத செயல் என்று கருத்து தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தஞ்சாவூரில் கோயில் குளத்தை தூர்வாரிய போது: சோழர் காலத்து 7 உறை கிணறு கண்டுபிடிப்பு
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்