ராஜஸ்தானில் அமித்ஷா சூளுரை கவிழ்க்க மாட்டோம் ஆட்சியை பிடிப்போம்
2021-12-06@ 01:48:19

ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; 2023ம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம்,’ என அமித்ஷா சூளுரைத்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. பிற மாநிலங்களைப் போல இங்கும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜ பல்வேறு முயற்சிகளை செய்வதாக சமீபத்தில் கெலாட் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் வந்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெய்ப்பூரில் நேற்று கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர்கள் அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என பயப்படுகிறார்கள். ஆட்சியை கவிழ்க்கப் போவது யார்? பாஜ நிச்சயம் உங்கள் ஆட்சியை கவிழ்க்காது. மக்கள் ஆசியுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். வரும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 3ல் 2 பங்கு வாக்குகளை பெற்று பாஜ தலைமையில் ஆட்சி அமையும்,’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஆட்டோ மீது உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றியதில் 8 பேர் உடல் கருகி பலி
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..
'ஆதார் - பான்' எண்ணை இணைக்காவிடில் நாளை முதல் இரு மடங்கு அபராதம் : வருமான வரித்துறை எச்சரிக்கை!!
மகாராஷ்டிராவில் மலரும் தாமரை.. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக நாளை பதவியேற்பு!!
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பில்கேட்சை சந்தித்த மகேஷ் பாபு
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;