நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 21-ஆக அதிகரிப்பு: இன்று ஒரே நாளில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி..!
2021-12-05@ 21:53:07

ஜெய்ப்பூர்: இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் மெதுவாக பரவி வருகிறது. ஒமிக்ரான் நோய் பாதிப்பு நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன. அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட ஒமிக்ரான் வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
இவர்களில் தொற்று பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஒமிக்ரான் வகை என உறுதியானதால் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர வேண்டுமென ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று நேற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கும், ராஜஸ்தானில் 9 பேருகும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள், எஞ்சிய 3 பேர், வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வந்தவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ராஜஸ்தான்- 9, கர்நாடகா-2, மகாராஷ்டிரா-8, குஜராத், டெல்லியில் தலா ஒருவருக்கு என நாடு முழுவதும் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
கியூட் நுழைவுத் தேர்வை ஏற்க ஒன்றிய பல்கலை.கள் தயக்கம்: யுஜிசி அதிருப்தி
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
இந்திய எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் விருது
ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: லடாக்கில் சோகம்
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!