பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு
2021-12-05@ 21:34:47

நாமக்கல்: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் அறிவித்துள்ளார். நாமக்கல்லில் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தலைமை வகித்தார். மாநில மூத்த துணைத்தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்து பேசினார். இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் காய்கறி மார்க்கெட்டில் கடந்த 12 ஆண்டாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. நவீன முறையில் காய்கறி மார்க்கெட்டை மாவட்ட நிர்வாகம் கட்டிக் கொடுக்க வேண்டும். வணிக நல வாரிய உறுப்பினராக அனைத்து வணிகர்களையும் இணைக்க வேண்டும். அதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கு 3 மாத கால அவகாசம் வேண்டும் என என தமிழக முதல்வரை சந்தித்து கேட்டுள்ளோம். ஒன்றிய நிதிஅமைச்சர், ரெடிமேட் சட்டைகளுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தியுள்ளார். இதை குறைக்க வலியுறுத்தி, டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு அளிக்கப்படும்.
காஸ் சிலிண்டர் விலை உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. ஓராண்டில் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் சாதாரண மக்கள் ஓட்டலில் வாங்கிச் சாப்பிடும் உணவுப்பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காஸ் சிலிண்டர் விலையை குறைக்கவேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து, இம்மாத இறுதியில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். கொரோனா காலத்தில் உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும். முதல்வரிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். நிச்சயம் வழங்குவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.
மேலும் செய்திகள்
மானூர் அருகே நள்ளிரவில் பண்ணையில் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய் கூட்டம்: 34 ஆடுகள் பலி
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை
கிருஷ்ணகிரி அருகே நாய்கள் கடித்து குரங்கு பலி: இறுதி சடங்கு செய்த கிராமமக்கள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே கூத்தாண்டவர் கோயில் தேர் திருவிழா
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!