வேலூர் சைதாப்பேட்டையில் புறக்காவல் நிலையம் துவக்கம்
2021-12-05@ 20:01:16

வேலூர்: வேலூர் சைதாப்பேட்டை பில்டர்பெட் சாலை, முருகன் கோயில் தொடங்கி லாங்கு பஜார் வரையிலான மெயின் பஜார் சாலை, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை மலையடிவாரம் என சைதாப்பேட்டையில் கஞ்சா விற்பனையுடன், அடிதடி, கோஷ்டி மோதல், கொலை, வழிப்பறி என பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், இது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் முருகன் கோயில் அருகில் மெயின் பஜார் சாலை துவக்கத்தில் புறக்காவல் நிலையம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு 24 மணி நேரமும் தொடர்ந்து காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் அங்கு தொடர் இரவு ரோந்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையத்தை ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட காவலர்கள், அப்பகுதி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
‘தி நீல்கிரிஸ் டெர்பி ஸ்டேக்ஸ்’ போட்டி: வெற்றி பெற்ற குயின் ஸ்பிரிட் குதிரைக்கு ரூ.21 லட்சம் பரிசு
கூண்டு வைத்து பறவைகளை பிடித்தவர் கைது
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!