தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்
2021-12-05@ 17:07:45

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்,ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து இன்று காலை கோவைக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கோவைக்கு விமானத்தில் செல்வதாக இருந்தது. அப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது என விமானநிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. சென்னையில் இருந்து இன்று காலை 10.10 மணியளவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானத்தில் கோவைக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். நாகலாந்தில் 13 பேர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லி பயணம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் டெல்லியில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
வங்கி கணக்கு மூலம் நேரடியாக கிராம கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவு: ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: திருநெல்வேலி வாலிபர் கைது
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
16 நகராட்சி ஆணையர்கள் இட மாற்றம்
திரைப்படங்களில் சண்டை காட்சிகள் வரும்போது ஆயுதங்கள், ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!